Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தினகரன் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் முகவை சுந்தர்ராஜன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
முகவை சுந்தர்ராஜன் தினகரன் நாளிதழில் நீண்ட காலம் பணிபுரிந்தவர். பழக இனிமையானவர், நல்ல பண்பாளர். பத்திரிகையுலகுக்கு புதிதாக வருபவர்களை ஊக்குவித்து மகிழ்பவர் முகவையார்.
சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினர். தனது சொந்த ஊரில் தற்போது வசிக்கும் அவருக்கு கடந்த 19-06-2019 புதன் கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே உயிர் பிரிந்தது.
அவரது இழப்பு பத்திரிக்கையாளர்கள் மத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.